இது விமர்சனம் அல்ல- நீர்ப்பாசி சிறுகதையை முன்வைத்து: பிரிவின்குமார் ஜெயவாணன்

ஆசிரியர் பாலமுருகன் அவர்களின் “நீர்ப்பாசி” சிறுகதையை வாசிக்கும் வாய்ப்பு கிட்டியது. கதையை முடிக்கும் தருணத்தில் இந்த கதையின் நாயகன் தனக்கோடி தன் சுற்றம் எனும் குட்டையில் வேர் படர இயலாதொரு “நீர்ப்பாசி”யாகவே காலத்தால் மிதக்கவிடப்பட்டிருப்பதாக எனக்கு தோன்றியது. கதை தொடங்கும் இடமே தனக்கோடியின் உளவியலை ஓரளவு படம் பிடித்துக் காட்டிவிட்டது. கதை நெடுகிலும் தனக்கோடிக்கு அடையாளமாகிப்போன அவனது சுபாவம் எனக்கு ஒன்றை உணர்த்தியது. நாம் நம்மை சார்ந்த, முக்கியமாக பாலிய (மாணவர்கள், குழந்தைகள்) பருவத்தில் இருக்கும் ஒருவர் மீது வீசும் முரணான சிந்தணை அல்லது அவரை நாம் நடத்தும் விதம் அவரின் உளவியலில் எத்தகையதொரு எதிர்விணையை ஏற்ப்படுத்தி விடுகிறது என்று.

சற்றே psychological understanding உடன் ஆசிரியர் பாலமுருகன் கதையை கையாண்டுள்ளதாக உணர்கிறேன். நாமும் அதே கருத்தியல் கொண்டு நோக்கினால் தெளிவாக புரியும். மேலோட்டமாக கடந்து சென்றோமேயானால் இது ஒரு சாதாரண கதை போல் தோன்றலாம். கதையில் Child Stress Incontinence மாதிரியான உளவியல் பலவீனம் கொண்ட சிறுவனாக தனக்கோடி இருக்கிறான். இது போன்ற hyper level பலவீனம் உளவியலை மிக ஆளமாக தாக்கிவிடுகிறது. தனக்கோடியின் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பழக்கத்திற்கு இதுவே கூட காரணமாகிருக்களாம் எனத் தோன்றுகிறது. அவனை பாதித்த சம்பவங்களும் அதீத தனிமையும் ஒன்று அல்ல மாறாக பல வேறு வடிவங்களான மனம் சார்ந்த பிரள்வுகளுக்கு இட்டு சென்றுள்ளது.
கதையின் நெடுகிலும் போதிய அன்பு, ஆரோக்கியமான குடும்ப உறவுகள், தனிமை, நல்ல நட்பு என்பன கிடைக்காமையால் உளம் சார்ந்த பலவீனங்களோடு நம்மை சுற்றி, நாம் பொதுவாக அக்கறை கொள்ளாமல் கடந்து செல்லும் மனிதர்களைப் படம் பிடித்து காட்டியுள்ளார். இரு வேறு விதமான மனோவியல் கோளாறுகளை; நோய் எனவும் வகைப்படுத்தி கொள்ளலாம், நம்மால் காண இயலும். இது இரண்டுமே குடும்பம், சுற்றுச்சூழல் மற்றும் தான் எதிர்நோக்கும் சம்பவங்களின் தாக்கத்தின் வெளிப்பாடுகள். ஒன்று தனக்கோடியை அடிப்பதிலும், உதைப்பதிலும் இன்பம் காணும் சர்வின், விமல் போன்ற கதாபாதிரங்களின் sadism. தவிர, அவர்கள் தருகின்ற துன்பத்தை ஏற்றுக்கொண்டு அனுபவிக்கும் தனக்கோடியின் (தன் உடல் மீதான வன்முறையை விரும்பி ஏற்கும் “Masochism”) மாதிரியான மனநிலை. இரண்டுமே மிகப் பெரும் சமூக அழிவுக்கு ஆணிவேர். இதே போல், நனவில் இல்லாதவர்களை இருப்பதாக கற்பனையாக எண்ணி அவர்களோடு சண்டையிடும் மனோபாவம் மற்றும் reality-யில் physically & mentally தன் மீது தொடுக்கப்படும் தாக்குதல்களுக்கு எதிர்வினை ஆற்ற வலுவிலந்த தனது இயலாமையின் வெளிப்பாடாக தனக்கு பிடிக்காத அல்லது தான் எதிரியாக கருதும் கட்டொழுங்கு ஆசிரியர், விமல், சர்வின் ஆகியோரை தினமும் துரத்தி அடித்து விளையாடும் செயல் அனைத்தும் அதீத depression, anxiety மற்றும் ஏமாற்றங்களின் பிரதிபலிப்பே என உணரப்படுகிறது.

ஒழுங்கை போதிக்கும் process-ல் நாம் கொஞ்சம் பிசகினாலும் அது ஒரு குழந்தையை எப்படி ஆக்கும் வல்லமை வாய்ந்த்து என சூசகமாக ஆசிரியர் பாலமுருகன் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மேலும் இந்த சமூகத்துக்கும் காட்ட விளைகிறார்.

குழந்தைகளைத் தவிர வயதில் பெரியவர்களுக்கு ஏற்படும் மனோவியல் பிரள்வுதனை தேவராஜனை வைத்து காட்டியுள்ளார் ஆசிரியர். தேவராஜன் சரியான வயதில் திருமணம் செய்யாததால் அவனால் உளவியல் ரீதியில் தனக்கோடி அனுபவித்த கொடூரமே தனக்கோடியினுள் இருந்த சைக்கோ தனத்தை உச்சத்தை நோக்கி தூண்டியிருப்பதாக கருதுகிறேன். அதுவே இக்கதையின் மாபெரும் twist-ஐ தனக்கோடி வெகு சாதாரணமாக ஷாலினியிடம் ஒரு சுவாரிசியமான fantasy கதையை விவரிப்பது போன்ற நிலைக்கு காரணமாக கருதுகிறேன்.

நம் நாட்டில் பகடி எத்தகைய எதிர்வினைகளை, குறிப்பாக இந்திய சமூகத்தில் ஏற்படுத்தியுள்ளதை என்பதை நாம் நன்கு அறிவோம். உதாரணமாக, மிக அண்மையில் இணைய பகடியினால் உளவியல் ரீதியில் துன்பம் அனுபவித்து மரணத்தை விருப்பமின்றி ஏற்றுக்கொண்ட சகோதரி திவ்யனாயகியை நாம் அறிவோம். விளையாட்டாக நாம் நினைக்கும் வெகு சொற்ப்ப செயலே இத்தகைய முடிவினைக் கொண்டு வந்துள்ளது. 2018-ல் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் மாணவர்கள் 53% வகுப்பு தோழர்களாலும், 39% மாணவப்பருவத்தில் இருக்கும் நபர்களாலும், 36% பெரியவர்களாலும் பகடிக்கு ஆளாக்கப்படுவதை காட்டுகிறது. மேலும், கதை எனக்கு உணர்த்தியதை தவிர்த்து அது எனக்கு நினைவுபடுத்திய விடயங்களும் உள்ளன. அது எனது பாலிய காலத்தில் சிறு குளங்களையும் கடலினையும் தேடி ஓடும் அச்சிறுவனை நினைவுப்படுத்தியது. இரண்டாவதாக, இடைநிலைப்பள்ளி காலங்களில் மாணவர் தலைவராக இருக்கும் போது அதிகமாக என் பள்ளியின் பின்புறம் வாழைமரங்கள் நிறைந்த பகுதியில் duty செய்யும் நேரங்களில் அந்த சில நிமிடங்களின் சிலுசிலுப்பு தொட்டு போகிறது. இதில் முக்கியமாக தமிழ்பள்ளியில் நான் படிக்கின்ற போது என்னுடைய வகுப்பு தோழனும் தனக்கோடியைப் போன்ற மனநிலையில் கிட்டதட்ட 5 வருடங்கள் என்னோடு பயனித்ததை நினைவுப்படுதியது. அன்று அவனுக்கு பேய் பிடித்திருந்த்தாகவே நான் உட்பட அவனது நண்பர்கள், அவனது பெற்றோர், பள்ளி ஆசிரியர்கள் எல்லாம் நம்பி இருந்தோம். 5 வருடங்களுக்கு முன் அவனை ஒரு 15 நிமிடம் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. அப்போது முன்பை விட தெளிந்திருப்பதை கண்டுக்கொண்டேன்.

 

நிறைய அறிய தகவல்களை நான் தவர விட்டதாக உணர்கிறேன். ஆகையால், வாசகர்கள் கீழே இணைக்கப்பட்டுள்ள இணைப்பின் வழி முழு கதையைப் படித்து பயன்பெற வேண்டிக்கொள்கிறேன்.!!!!!👇

http://balamurugan.org/2020/09/06/சிறுகதை-நீர்ப்பாசி/

பிரிவின்குமார் ஜெயவாணன்

பீடோங், கெடா

Share Button

About The Author

One Response so far.

  1. Bamah says:

    இந்தக் கதையில்..ஒரு சிறுவனின் மனப்போராட்டம் தெரிந்தது. அவன் கிண்டல் கேலிக்கு மட்டும் ஆளாகவில்லை… பாலியல் தொல்லைக்கு ஆளாகியுள்ளான் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. பிள்ளைகளுக்கு மனதளவிலும் உடலளவிலும் ஏற்படும் இறுக்கங்களைப் பெற்றோர்கள் பலர் புரிந்துகொள்வதில்லை. அருமையான கதை.தனக்கோடி போன்று இன்னும் பல சிறுவர்கள் இருக்கவே செய்கிறார்கள். 🙏🏼😔
    வாழ்த்துகள் நண்பரே.🙏🏼