Coronavirus – குடும்பத்தையும் சமூகத்தையும் நாட்டையும் பாதுகாப்போம்

Coronavirus தாக்கம்

 

இன்று உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும், உலகநாடுகளின் எல்லைகளைப் பரப்பரப்பாக்கிக் கொண்டிருக்கும் 100,000 பேருக்கும் மேலாக பரவிவிட்ட இந்தக் கிருமியின் தோற்றம் சீனாவிலுள்ள வூகான் நகரம் என்பதை எல்லோரும் கடந்த டிசம்பர் மாதம் அறிந்தோம். ஆனால், இன்று பல தேசங்களைத் தாண்டி எல்லைகளைக் கடந்து  பல உயிர்களைக் கொன்று  இதே கிருமி நம் நகருக்குள் நுழைந்துவிட்டது.

ஆனால், இன்றளவும் இதனைக் கருத்தில் கொள்ளாமல் பாதுகாப்பற்ற நிலையில் நம்மவர்கள் நகரங்களில் சுற்றிக் கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. அவர்களுக்குப் பாதுகாப்புணர்வை உண்டாக்க வேண்டும் என்பதை நோக்கி இப்பதிவு சுருக்கமாக உருவாக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பற்றி உலகச் செய்திகளைத் தெரிந்து கொள்ள கீழ்க்கண்ட சுட்டியைப் பயன்படுத்தலாம்.

who.int

 

 

 யாரை இந்தக் கிருமி எளிதாகத் தாக்கும்?

  1. வயதானவர்கள்
  2. குழந்தைகள்

இவ்விரு பாலருக்கும் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்துதான் இருக்கும் என்பதால் சட்டென பரவுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

  1. நீரிழிவு நோய் உள்ளவர்கள்
  2. சுவாசம்/இருதயம் தொடர்பான மருத்துவ சிக்கல் உள்ளவர்கள்

இந்த நான்கு வகையினரும் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டிய காலக்கட்டம் இது. குறிப்பாக குழந்தைகள் எளியவர்கள்; அவர்களை நாம் கவனத்துடன் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது ஆபத்தான நிலையில் மனிதர்களை நோக்கி படையெடுத்துப் பரவிக் கொண்டிருக்கும் கொரோனாவிடமிருந்து தற்காத்துக் கொள்ள மிக முக்கியமாக நாம் செய்ய வேண்டியவைகள்:

  1. அதிகமானோர் கூடும் இடங்களை முடிந்தவரை தவிர்க்கவும். (குறிப்பாக குழந்தைகள்-வயதானவர்களை அழைத்துச் செல்ல வேண்டாம். அதிகமானோர் என்பது ‘Mass Gathering’ என்பதைக் கருத்தில் கொள்ளவும். எடுத்துக்காட்டாக: Water Theme Parks, Shopping Malls, Teaters, Night Market, கலை நிகழ்ச்சிகள், போட்டி விளையாட்டுகள் போன்றவை ஆகும்.

 

  1. Sanitizer-ஐ உடன் வைத்துக் கொண்டு பொது இடங்களுக்குச் சென்று வந்தால் வீட்டில் நுழையும் முன் அல்லது நுழைந்தவுடன் உடனடியாகக் கைகளைக் கழுவிவிடவும். தாமதிக்க வேண்டாம். எடுத்துக்காட்டாக நீங்கள் வங்கிக்குச் சென்று வந்திருப்பீர்கள். வங்கியின் கதவு பிடியில் கையை வைத்திருப்பீர்கள். அதே கதவில் அன்று பலர் கைகளை வைத்திருப்பார்கள். ஆக, இதன் வழியாகவும் கிருமி தொற்றுவதற்கு வாய்ப்புண்டு. ஆகவே, Sanitizer-ஐஉபயோகிப்பது நிவாரணத்திற்கு வழிவகுக்கும்.

 

  1. காய்ச்சல், சளி இத்துடன் மூச்சுத் திணறல் இருந்தால் சற்றும் தாமதிக்காமல் அருகாமையிலுள்ள மருத்துவமனை அல்லது கிளினிக்கிற்குச் சென்று விடவும்.

 

  1. வெளிநாட்டவர்கள் வேலை செய்யும் அல்லது பயணிக்கும் பொதுபோக்குவரத்துகளை/இடங்களை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது.

 

  1. வீட்டின் முன் மஞ்சள் கலந்த நீரை எப்பொழுதும் வைத்திருக்கவும். வெளியில் சென்றுவிட்டு உள்ளே வருபவர்கள் கட்டாயமாக அந்நீரில் கால்கள் கைகளைக் கழுவிவிட்டு வருவதும் மிக முக்கியமானதாகும்.

 

  1. இக்காலக்கட்டத்தில் முடிந்தவரை அசைவ உணவைக் குறைப்பதும் மார்க்கேட்டில் நீங்கள் வாங்கும் இறைச்சிகளைக் குறைப்பதும் நல்லது. சைவ உணவை அதிகப்படுத்தவும்; காய்க்கறிகளை நன்றாகக் கழுவிவிட்டு வேக வைத்துச் சாப்பிடும் பழக்கத்தைக் கடைப்பிடிக்கவும்.

 

  1. வெளிநாட்டுப் பயணத்தை ஒத்தி வைப்பது நலம். நீங்கள் செல்லும் சுற்றுலாத்தளம் பாதுகாப்பானதாக இருப்பினும் அது சுற்றுலாத்தளம் என்பதால் வெளிநாட்டவர்கள் அங்கு வருவதை நாம் தவிர்த்தல் இயலாது. இதனால், கிருமி நம்மை எந்நேரத்திலும் தாக்கும். நாமே பணம் கொடுத்து வெளிநாடு சென்று விணையைத் தேடிக்கொள்ளலாமா? இயன்றால் தவிர்க்கவும்.

 

  1. அடுத்து முக்கியமானது வெளியில் யாரைப் பார்த்தாலும் கைக்குலுக்குவதைத் தவிர்த்து விடவும். கிருமிகள் கைகளின் வழியாகவே மிக விரைவாகப் பரவுகின்றது. நம் கைகளில் நூற்றுக்கணக்கான கிருமிகள் எப்பொழுதும் இருக்கும் என்பதால் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. கைக்கூப்பி வணக்கம் சொல்வதை இப்போதைக்குப் பழக்கமாக்கிக் கொள்ளவும்.

 

  1. குழந்தைகளை உணவகங்களுக்குக் கொண்டு செல்வதையும் வெளியுணவையும் இக்காலக்கட்டத்தில் தவிர்ப்பது நன்று.

 

  1. பள்ளிக்கூடம் அல்லது பள்ளிக்கூடத் தொடர்பான நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் மாணவர்களுக்குக் கட்டாயமாக mask அணிவிக்கவும். இதைப் பெற்றோர்கள் கட்டாயமாக மேற்கொள்ள வேண்டும். நம்மைவிட சிறியவர்களுக்கு மிக எளிதில் நோய் தொற்றிக் கொள்ளும் என்பதைக் கருத்தில் கொள்ளவும்.

 

  1. ஒருவேளை ஆள் கூட்டமாக இருக்கும் இடங்களுக்குச் சென்றால் எல்லோரிடமிருந்து ஒரு மீட்டர் தள்ளியே நடக்கவும்; நிற்கவும்; பேசவும்.

 

 

 

இந்நோயின் அறிகுறி?

முதலில் சுவாச பிரச்சனை ஏற்படுபவர்கள் மருத்துவமனை சென்றுவிட வேண்டும். இக்கிருமி முதலில் தாக்குவது நுரையீரலை என்பதால் இக்கிருமி கண்டவர்கள் சுவாசக் கோளாறுகளுக்கு ஆளாவார்கள். சளி, இருமல், காய்ச்சல், தலைவலி, தொண்டை வலி என்பதெல்லாம் அடுத்த நிலைகள்.

 

எப்படி அறிவது?

 

மூச்சை இழுத்து 10 விநாடிகள் அடக்கி மீண்டும் விடும்போது எந்தத் தடுமாற்றமும் மூச்சிரைப்பும் இருமலும் இல்லையென்றால் உங்கள் நுரையீரலுக்கு எவ்வித சிக்கலும் இல்லை என்பதை இதன்வழியும் அறியலாம். இதுவொரு எளிமையான எடுத்துக்காட்டுத்தான். இருப்பினும் மருத்துவரைச் சென்று பரிசோதித்து மட்டுமே அதிகாரப்பூர்வத் தகவலைத் தெரிந்து கொள்ளல் வேண்டும்.

அதிக வெப்பத்தில் கிருமி இறந்துவிடுவதாகச் சொல்லப்படுகிறது. மேலும், கொரொனா கிருமி தாக்கம் ஏற்பட்டால் தொண்டையில் சிலநாள்கள் தங்கியிருக்கும் என்கிறார்கள். ஆகவே, மஞ்சளில் வாய்க் கொப்பளிப்பதையும் வழக்கமாக்குங்கள்.

 

இவை எல்லாவற்றுக்கும் மேலாக இத்தனை பாதுகாப்பு அம்சங்களையும் தாண்டி நம்மைத் தொட்டு நம்மை அணுகி நமக்கு வைத்தியம் பார்த்துக் கொண்டிருக்கும் அனைத்து மருத்துவர்களுக்கும் குறிப்பாக அனைத்து தாதியினருக்கும் நெஞ்சம் நெகிழ்ந்த அன்பு.

 

நாமும் கடைப்பிடிப்போம்; பிறருக்கும் உரைப்போம்.

நன்றி

கே.பாலமுருகன்

Sumber:

KKM

WHO

Share Button

About The Author

3 Responses so far.

  1. S. SETHA says:

    Very important message sir, I really appreciate

  2. நாகேந்திரன் says:

    நன்றி அன்பரே..

  3. Dharsha says:

    Good, I really appreciate. Thankyou.