தேசிய அளவில் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்பட்ட சிறுகதை எழுதும் போட்டியின் முதல் சுற்றில் தேர்வான மாணவர்களின் விவரங்கள்.

https://youtu.be/QI7PYrI5QTo

தேசிய அளவில் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்பட்ட சிறுகதை எழுதும் போட்டியின் முதல் சுற்றில் தேர்வான மாணவர்களின் விவரங்கள்.

சிறுவர் சிறுகதை எழுத்தாளர்கள் 2019

நீங்களும் எழுத்தாளர்கள்தான்

அறிவியல் புனைவு களத்தின் வழியாக கனவுருப்புனைவு, அறிவியல் புனைவு, சிறுகதைகள் போன்ற எழுத்தாற்றலை வளர்க்கப் புதிய திட்டமாக ‘தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான தேசிய அளவில் சிறுகதை எழுதும் போட்டி 2018/2019’ நடத்தப்பட்டது. 200க்கு மேற்பட்ட சிறுகதைகள் நாடு முழுவதிலுமிருந்து கிடைக்கப் பெற்றன. சிறுவர்கள் மத்தியில் நல்ல ஆக்கச் சிந்தனைமிக்க எழுத்தாளர்களை அடையாளங்கண்டு அவர்களை எழுதத் தூண்டுவதே இத்திட்டத்தின் முதன்மையான நோக்கம் ஆகும்.

அவ்வகையில் முதல் சுற்றில் தேர்வான 22 சிறுகதைகளும் வருகின்ற மார்ச் – ஏப்ரல் மாதம் முறையாக வடிவமைக்கப்பட்டு நூலாக்கம் செய்யப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். அதே சமயம் இரண்டாம் சுற்றில் சிறந்த பத்து சிறுகதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுத் தொகையும் நற்சான்றிதழ்களும் கொடுக்கப்படும். வரலாற்றில் சிறுவர் இலக்கியத்திற்கான சிறந்த முயற்சி என்று பதிவு செய்யவிருக்கும் இத்திட்டம் நிதானமாக முன்னெடுத்துச் செல்லப்படும் என்பதால் கால அவகாசமும் தேவைப்படும் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

தேர்வு செய்யப்படாத மற்ற மாணவர்களுக்கும் எங்களின் மனமார்ந்த வாழ்த்துகள். உங்களின் முயற்சி தொடர வேண்டும். இக்களம் இல்லையெனில் வேறொரு களத்தில் சந்திக்கலாம். முயற்சியுள்ளவரை தோல்வி என்பது நிரந்திரம் அல்ல. முதல் சுற்றில் தேர்வான மாணவர்களுக்கும் நல்வாழ்த்துகள். உங்களின் அனைத்துச் சிறுகதைகளும் நுலில் இடம்பெறும். விரைவில் இரண்டாம் சுற்றுக்கான முடிவுகள் அறிவிக்கப்படும்.

முதல் சுற்றில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் ஆசிரியர்கள்/பெற்றோர்கள் விரைவில் புலனத்தின் வாயிலாகத் தொடர்புக் கொள்ளப்படுவர். நன்றி.

இக்கண்

கே.பாலமுருகன்

சிறுகதை போட்டிக் குழுத் தலைவர்

 

Share Button

About The Author

Comments are closed.