ஜகாட் திரைப்படம் – புத்தகப் பரிசினை வெல்லும் வெற்றியாளர் – 1

ஜகாட் திரைபடத்திற்கான புத்தகப் போட்டியில் பங்குப் பெற்று நூல்களைப் பெறவிருக்கும் ச.நாகேன் தோழரின் கருத்து:

1870 மலாயாவிற்க்கு இந்தியர்கள் சஞ்சி கூலிகளாக வந்ததாகக் கூறப்படுகிறது. அப்போதையச் சூழலில் சாதி கொடுமைகளால் இனத்துக்குள்ளேயே பிளவுபட்டுக் கிடந்த இந்தியர்களுக்கு ஆட்சியாளர்களால் ஏற்படுத்தப்பட்ட பின்னடைவான காலம் அது. 1930 இரப்பர் தோட்டங்கள் தோன்றியப் பின்னரும் கூட சாதி வாரியாக வீடுகள் பிரிக்கப்பட்டு வேலைகளும் வழங்கப்பட்டன. சாதி கொடுமைகளுக்கு அப்பாற்ப்பட்டு, ஒரளவு நல்ல வாழ்க்கை வாழ்ந்தனர். சுதந்திரத்துக்குப் பின்னர் 1980களின் இறுதிகளில் பெரும்பான்மையான இரப்பர் தோட்டங்கள் தூண்டாடுதலுக்கு பலியாகின, இக்காலட்டத்தில்தான் இந்தியர்களின் நிலை ஒரு இருண்ட பகுதியானது. அதைத்தான் ஜகாட் திரைபடத்தில் காட்டப்படுகிறது. நகரமுன்னோடிகளாக (தனா ஹாரம்) மறுபிரவேசம் பெற்றனர். தொழில், கல்வி, சுகாதாரம், வழிபாட்டு தாளங்கள் மற்றும் விளையாட்டு மைதானம் போன்ற அடிப்படை வசதிகள் இந்த தனா ஹாரம் வாழ்க்கையில் மறுக்கபட்டு, வாழ்க்கையை நகர்த்துவதே நரகவேதனையானக் காலக்கட்டம்.

10523157_10204046588145095_5599896183013882887_n

ச.நாகேன், சோஷலிஸ்ட் கட்சியில் தீவிரமான ஈடுபாடு கொண்ட இளைஞர். மலேசியாவின் படைப்புகளை ஆதரிப்பதில் தீவிரம் காட்டி வருகிறார்.
முயற்சி செய்த மற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துகள். மலேசியாவின் இருண்ட காலத்தை அறிவிக்கும் ஜகாட் திரைப்படத்தைத் திரையரங்கில் பார்த்துவிட்டீர்களா? உடனே சென்று பாருங்கள். உள்ளூர் படைப்புக்கு நாம் ஆதரவு கொடுப்பதன் மூலம் நம் கலையை நாம் வாழ வைக்க முடியும். போட்டிக்கான கேள்விகள் நாளையும் தொடரும்.

கே.பாலமுருகன்

Share Button

About The Author

Comments are closed.