ஜகாட் திரைப்படம் – புத்தகப் பரிசு / 27.12.2015

வணக்கம்,

17-12-2

எனது அதிகாரப்பூர்வமான அகப்பக்கம் இனி தொடர்ந்து சில மாற்றங்களுடன் இயங்கும். விரைவில் பூரணமான வடிவத்துடன் செயல்படும். மலேசியாவில் தற்பொழுது வெளியாகி மக்கள் மனத்தில் இடம்பிடித்து வரும் மலேசிய இயக்குனர் சஞ்சய் அவர்களின் ஜகாட் படம் தொடர்பான புத்தகப் பரிசுப் போட்டியை அறிவித்திருந்தேன். இன்று அதற்கான முதல் கேள்வி பதிவேற்றம் செய்யப்படுகிறது. கேள்விக்கான பதிலை இங்கேயோ அல்லது முகநூலிலோ, மின்னஞ்சலிலோ நீங்கள் அனுப்பி வைக்கலாம். சிறந்த பதிலுக்கான பரிசு:

1. சாகித்ய அகாதமி பரிசு பெற்ற நூலான லா.ச.ராமமிருதம் எழுதிய ‘சிந்தா நதி’.
2. மாணிக்கவாசகப் புத்தக விருது பெற்ற கோ.புண்ணியவான் எழுதிய ‘செலஞ்சார் அம்பாட்’ வரலாற்று நாவல்

மேற்கண்ட இரு புத்தகங்களும் பரிசாக அனுப்பி வைக்கப்படும்.

ஜகாட் திரைப்படம் பற்றிய கேள்வி 1:

ஜகாட் திரைப்படம் மலேசிய இந்தியர்களின் இருண்ட பகுதியைப் பேசுகிறது என விமர்சகர்கள் அடையாளப்படுத்துகிறார்கள். எது அந்த இருண்ட பகுதி என ஜகாட் முன்வைக்கிறது? ( பதில் 20 சொற்களுக்கு மேற்பட்டு விரிவாக இருப்பதை வரவேற்கிறேன்)

– கே.பாலமுருகன், மின்னஞ்சல்: bkbala82@gmail.com / facebook: https://www.facebook.com/balamurugan.kesavan.7

Share Button

About The Author

Comments are closed.